En Jeevanulla Naatkalellaam | New Christian Worship Song | Kirubai song
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உம்மை துதித்திடுவேன்
உம் நாமத்தையே சொல்லி சொல்லி
உயர்த்தி மகிழுவேன்
ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை நல்லது
உம் கிருபையால் என்னை நிரப்பிடுமே
வரண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்ற நிலத்தில்
என் ஆன்மா உம்மீதே தாகமாய் என்றுமே உள்ளதே
என் தேவனே உம்மை ஆதிகாலமே
தினம் தினம் தேடுவேன்
தினம் தினம் தேடுவேன்
நிணத்தையும் கொழுப்பையும் உண்டது போலவே
என் மனம் உம் மீதே திருப்தியாகி தினமும் மகிழுதே
என் துணையாளரே உம்மில் களிகூரவே
உம் மார்பில் சாய்ந்திடுவேன்
உம் மார்பில் சாய்ந்திடுவேன்
படுக்கையிலும் உம்மை நினைக்கிறேன்
இராச்சாமத்தில் தியானிப்பேன்
உமது மகிமை வல்லமையை கண்டு துதிக்கிறேன்
உம்முகமே தினம் கண்டிடவே ஆவலாய்
உள்ளதே
ஆவலாய் உள்ளதே
Un Nambikkai Veen Pogathu | New Christian Song
உன் நம்பிக்கை வீண்போகாது
உன் வேண்டுதல் கேட்கப்படும்
நீ விசுவாசத்தால் தேவ மகிமை கண்டிடுவாய்
உன் துக்கமெல்லாம் சந்தோஷமாய் மாறிடுமே
கலங்கி நிற்காதே எதற்கும் சோர்ந்து போகாதே
கர்த்தர் இயேசு உன்னோடு மறந்து விடாதே
சிறுமைபட்ட நாட்களுக்கும்
துன்பத்தை கண்ட வருஷங்களுக்கும்
சரியாக உன்னை மகிழ்ச்சியாக்குவார்
வாழ்நாளெல்லாம் களிகூர செய்திடுவார்
வறுமைக்கும் வெறுமைகளுக்கும்
அவமானத்தால் வந்த நிந்தைகளுக்கும்
இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார்
உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பிட செய்வார்
நம்பிக்கை துரோகங்களுக்கும்
ஏமாற்றம் விரக்தி தோல்விகளுக்கும்
பதிலாக இயேசு உன் கூட இருப்பார்
சந்தோஷம் சமாதானம் தந்திடுவார்
Uyirodu Ezhunthar | New Christian worship Song
உயிரோடு எழுந்தார் என் உணர்வோடு கலந்தாரே - 2
கண்மணி போல் என்னை காப்பவரே
காலமெல்லாம் என்னை சுமப்பரே- 2
துதியும் கனமும் மகிமையுமே
உமக்கு செலுத்தி உயர்த்திடுவேன் - 2
உயிருள்ள நாளெல்லாம்
உயிருள்ள நாளெல்லாம்
வேதனை துன்பம் நெருக்கத்தில் நெருங்கி வந்து அணைத்தீரே
கதறி அழுத நேரமெல்லாம் அருகில் நின்று தேற்றினீரே - 2
ஒன்றும் இல்லா நேரங்களிலே உதவி செய்து உயர்த்தினீரே
கைவிட பட்டு கலங்கும் போது கரம் பிடித்து தூக்கினீரே
சத்துருக்கள் முன்பாக பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
என் தலையை எண்ணெயினால் அபிஷேகித்து உயர்த்தினீர்
நிலையில்லா இந்த உலகிலே நிம்மதி இன்றி வாழ்ந்தேனே
வெறுமையான வாழ்வில் வந்து நம்பிக்கை நங்கூரமானீரே - 2
நிந்தை அவமானம் யாவும் அகற்றி நித்திய வாழ்வை எனக்கு தந்தீர்
கல்வாரியிலே ரத்தம் சிந்தி உந்தன் அன்பால் என்னை மீட்டீர்
பாவ சாப ரோகங்கள் யாவும் அழித்து காத்தீரே
என்னை உமக்காய் தெரிந்து கொண்டு புதிய மனிதனாய் மாற்றினீர்
Siluvaiyil Sinthiya Rathathinale | New Christian song
சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே
சமாதானத்தை உண்டு பண்ணினீர்
பாவியாகவே இருந்த எங்களை
பரிசுத்தமாய் மாற்றி விட்டீரே
ஆராதனை ஆராதனை
ஜீவனை பலியாக தந்தவர்கே
ஆராதனை ஆராதனை
அன்பராம் எந்தன் இயேசுவுக்கே
மகிமையின் நம்பிக்கையாக
எங்களுக்குள் இருப்பவரே
தம்முடைய இராஜ்யத்திற்கும்
மகிமைக்கும் அழைத்துக்கொண்டீர் - ஆராதனை
மரணத்தையும் பாதாளத்தையும்
சிலுவையிலே வென்று விட்டவரே
ஜீவனையும் அழியாமையையும்
கிருபையாக தந்துவிட்டீர் - ஆராதனை
Irakkamaai Iruntheer | New Christian Worship Song
இரக்கமாய் இருந்தீர் மனதுருக்கமாய் இருந்தீர்
ஆயிரம் தலைமுறை மட்டும் இரங்குவேன் என்றீர்
இமைபொழுதும் என்னை மறக்க வில்லையே
நான் விலகி சென்றும் விட்டு விலக வில்லையே
மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்
கிருபையோ விலகாதென்றீர்
சமாதான உடன்படிக்கை செய்தீர்
அநாதி சிநேகத்தினால்
என்னையும் நேசித்தீரையா
காருண்ய கேடகத்தால்
என்னையும் இழுத்துக்கொண்டீரே
எனது வழிகளெல்லாம்
உம் சமுகம் முன் செல்லுதே
வாழ்கின்ற காலமெல்லாம்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்
Thayin Karuvile Ennai | தாயின் கருவிலே | New Christian Worship Song | Re...
தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டீரே
நல்ல தகப்பனாக தினம் என்னை சுமந்து வந்தீரே
தகப்பனே தந்தையே தகப்பனே தந்தையே
உங்க கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே
உங்க பார்வை பட்டதால் என் வாழ்க்கை மாறியதே
ஆகாதவன் என்று நான் தள்ளப்பட்டிருந்தேன்
வேண்டாம் என்று பலராலும் வெறுக்கப்பட்டிருந்தேன்
தேடி வந்து அன்பை பொழிந்தீரே
உம் கரங்களினால் அணைத்து கொண்டீரே
தகுதியில்லை என்று நான் ஒதுக்கப்பட்டிருந்தேன்
துடைத்து போடும் கந்தை போல எறியப்பட்டிருந்தேன்
உங்க பிள்ளை என்னும் தகுதி தந்தீரே
உம் கிருபையினால் காத்துக்கொண்டீரே
இல்லாதவன் என்று நான் விலக்கப்பட்டிருந்தேன்
மனிதர் பேசும் வார்த்தைகளால் காயப்பட்டிருந்தேன்
என்னை குப்பையிலிருந்து தூக்கி எடுத்தீரே
உம் சிங்காசனத்தில் அமரவைத்தீரே
Nechayamaga Unnai Asirvathithu | நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து | Rev. V.S...
நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து
பெருகவே பெருக பண்ணுவேன்
உன்னை வலதுபுறத்திலும்இடதுபுறத்திலும்
இடங்கொண்டு பெருகிடுவாய்
உன் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்
உன் துக்க நாட்கள் முடிந்து போகும்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.
நீர்பாய்ச்சலான தோட்டமாய் செழிப்பாக மாறப்பண்ணுவேன்
வெட்கப்பட்ட இடத்தில் உன்னை கீர்த்தியும் புகழ்ச்சியாக்குவேன்
உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன்
நீ கீழாகாமல் மேலாகிடுவாய்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.
பட்சித்த வருஷங்களின் விளைச்சல்களை திரும்ப தருவேன்
நன்மையினாலே உன்னை திருப்த்திபடுத்தி
சந்தோஷத்தால் நிறைத்திடுவேன்
உன் பெயரை பெருமை படுத்துவேன்
நீ ஆசீர்வாதமாய் வாழ்ந்திடுவாய்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.
உன் நடுவில் வாசம்பண்ணுவேன் உன்னை கண்மணி போல் காத்திடுவேன்
என் நாவினால் சொன்னவைகளை என் கரத்தினால் செய்து முடிப்பேன்
ஆயிரம் மடங்கு ஆசீர்வதிப்பேன்
நீ கோடா கோடியாய் பெருகுவாய்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.
Enmeetha Ithanai Anbu | என்மீதா இத்தனை அன்பு | Tamil Christian New Song ...
என்மீதா இத்தனை அன்பு
வியந்து பார்க்கின்றேன்
விலையேற பெற்ற உந்தன்
இரத்தத்தால் மீட்டீரே
உம் அன்பின் அகலம் நீளம் உயரம்
உணர்ந்து கொள்ள செய்தீரே
உதவாத என்னையும்
உருவாக்கி மகிழ்ந்தீரே
1. நிந்தைகள் அடைந்தும் அவமானமடைந்தும்
எனக்காக யாவையும் சகித்தீரே..
உமக்கு முன்பாக என்னை வைத்து
சந்தோஷமாக ஏற்றீரே...
2. காரி உமிழ்ந்தும் காயங்கள் பட்டும்
எனக்காக யாவையும் ஏற்றீரே.
உம் அன்பின் உறவில் என்னை சேர்க்க
எனக்காக மரித்தீரே
3. உறவுகள் என்னை வெறுத்த போதும்
உம் அன்பு என்னை தாங்குதையா
சாம்பலான என் வாழ்வை
சிங்காரமாக மாற்றினீரே
பாடல் வரிகள்
..... .......................
என்மீதா இத்தனை அன்பு
வியந்து பார்க்கின்றேன்
விலையேற பெற்ற உந்தன்
இரத்தத்தால் மீட்டீரே
உம் அன்பின் அகலம் நீளம் உயரம்
உணர்ந்து கொள்ள செய்தீரே
உதவாத என்னையும்
உருவாக்கி மகிழ்ந்தீரே
1. நிந்தைகள் அடைந்தும் அவமானமடைந்தும்
எனக்காக யாவையும் சகித்தீரே..
உமக்கு முன்பாக என்னை வைத்து
சந்தோஷமாக ஏற்றீரே...
2. காரி உமிழ்ந்தும் காயங்கள் பட்டும்
எனக்காக யாவையும் ஏற்றீரே.
உம் அன்பின் உறவில் என்னை சேர்க்க
எனக்காக மரித்தீரே
3. உறவுகள் என்னை வெறுத்த போதும்
உம் அன்பு என்னை தாங்குதையா
சாம்பலான என் வாழ்வை
சிங்காரமாக மாற்றினீரே
Aththuma Vanjithu Katharuthe | ஆத்துமா வாஞ்சித்து | Tamil Christian New ...
ஆத்துமா வாஞ்சித்து கதறுதே
நேசரின் முகத்தை தேடுதே
உம் பாதம் பணிந்து உம்மையே நோக்கி
ஆனந்தம் கொள்ளுதே
பாவ சேற்றில் கிடந்தேன் நான்
கழுவி அணைத்தீரே
நிம்மதியின்றி தவித்த எனக்கு
ஆறுதல் தந்தீரே
நீண்ட தூரம் சென்றேன் நான்
தேடி வந்தீரே
விலகி சென்ற என்னை அணைத்து
அன்பை தந்தீரே
பாலைவனத்தில் கிடந்தேன் நான்
பாதுகாத்தீரே
ஆதரவின்றி இருந்த எனக்கு
உதவி செய்தீரே
யுத்தத்தில் வல்லவர் | Yuthathil Vallavar | New Tamil Christian Song
யுத்தத்தில் வல்லவர்
கர்த்தர் என்பது அவர் நாமம்
சர்வ வல்ல தேவனவர்
சகலத்தையும் ஆள்பவரே
எனக்காக யாவும் செய்து
என்னோடு கூட இருந்து
என்னையவர் நடத்திடுவரே
அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமாய் பாடிடுவேன் அனுதினமும் உயர்த்திடுவேன்
எதிரிகளால் உருவாகும் ஆயுதங்கள் வாய்க்காமல்
காக்கின்ற தேவனவர் என்னோடு இருக்கின்றாரே
எனக்காக வழக்காடி எனக்காக நியாயம் செய்து
நீதியாய் தீர்ப்பு செய்வாரே
உன்னை விட்டு விலக மாட்டேன் உன்னை என்றும் கைவிட மாட்டேன்
என்று சொன்ன தேவனவர் என்னோடு இருக்கின்றாரே
எனக்கு முன்னே அவர் சமூகம் எதைக்குறித்தும் கவலை இல்லை
என்னை என்றும் காத்திடுவாரே
திறந்த வாசலை உனக்கு முன்னே வைக்கின்றேன் என்று சொல்லி
நடத்துகின்ற மீட்பர் இயேசு என்னோடு இருக்கின்றாரே
ஒருவரும் பூட்டாதபடி வாசலை திறந்து வைத்து
என்றென்றும் நடத்திடுவாரே
உலகத்தின் முடிவுவரை சகல நாளும் கூட இருப்பேன்
என்று சொன்ன இயேசு ராஜன் என்னோடு இருக்கின்றாரே
என்னை அவர் பாதுகாப்பார் என்னை அவர் வழி நடத்துவார்
எனக்கென்றும் இயேசு போதுமே