Bread of Life Church India

முடிவல்ல...துவக்கம்




பிரியமானவர்களே, தெய்வீக அன்பும், தேவ கிருபையுமே நம்மை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த மாதமும் தேவனுடைய ஆசீர்வாதமான வார்த்தையின்படி கர்த்தர் உங்களை வழிநடத்தப்போகிறார்.
இந்த மாதத்தின் விசேஷித்த ஆசீர்வாத வசனம் இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?’’ (எரேமியா 32:27).
இந்த வசனத்தை நாம் கவனித்து வாசித்தால் தேவன் நம்மிடத்தில் கேட்கும் கேள்வியை நம்மால் புரிந்து கொள்ள முடியும். நாம் பல நேரங்களில் நம்முடைய கஷ்டங்களையும், நம்முடைய வேதனைகளையும் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறோம்.