Bread of Life Church India

தேவ நியமனமும்! சீரழியும் சமுதாயமும்!!

இன்றைய நவீன சமுதாயத்தின் புரட்சிகளை பார்க்கும் பொழுது, மிகவும் கவலை தரக்கூடியதாக உள்ளது? இக்காலத்தில் பாலின உறவுகளை பொறுத்தமட்டில் எல்லா நல்லொழுக்க வரம்புகளையும் அது நீக்க விரும்புகிறது.

       வேறுயாரும் எதிர்ப்பு தெரிவிக்காத வரையில் எந்த விதமான பாலின நடக்கைகளும் சரிதான்என்று சில நவீன கால முட்டாள்கள் சொல்லுகின்றனர்.

      இப்படி சமுதாய சீர்கேடுகளின் போக்கு,“நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ அப்படியே மனுஷ குமாரன் வரும் காலத்திலும் நடக்கும்” (மத் 24:37) என்று இயேசு கிறிஸ்து கூறியது போல், நடந்து வருகின்றன.

சிலுவையில்லா இயேசு !!





சிலுவையில்லா இயேசு எல்லோருக்கும் பிடிக்கும் ,சிலுவையோடு, பாவியை மீட்க வந்த இயேசுவை ஏற்பது என்பது எல்லோருக்கும் சற்று கடினமான ஒன்றுதான்.


பரிசுத்த வேதாகமம் கூருகிறது, "பாவிகளைமீட்க கிறிஸ்து இயேசு வந்தார்''

இயேசு கிறிஸ்து ஞான குருவாக இப்பூமிக்கு வரவில்லை, உலக இரட்சகராக இப்பூமிக்கு வந்தார்.


ஒரு கதை ஒன்று இப்படியாக உள்ளது "நான்கு குருடர்கள் யானையை தடவி பார்த்தார்களாம், ஒருவன் வாலை பிடித்துக்கொண்டு சொன்னானாம் யானை கயிறு போல் உள்ளது என்று, மற்றொருவன் காதை பிடித்துக்கொண்டு முறம் என்று சொன்னானாம் இப்படி நான்கு பேரும் ஒவ்வொன்றை பிடித்துக்கொண்டு ஒவ்வொருவிதமாக கூறினார்களாம், ஒருவனுக்கும் யானையின் முழு உருவம் தெரியவில்லை.