Bread of Life Church India

யார் மாதிரி?



ஒரு சமயம் ஊழியத்திற்கு தயாராகஇருந்த வாலிபர்களிடத்தில் “நீங்கள் எப்படி, யார் மாதிரி ஊழியம் செய்வீர்கள்’’ அதை நீங்கள் ஒரு பேப்பரில் தனித்தனியாக எழுதி கொடுக்க வேண்டும் என்று கேட்ட போது,  ஒவ்வொருவரும்  “நான் இவரைப்போல ஊழியம் செய்ய விரும்புகிறேன். அவரைப்போல ஊழியம் செய்ய விரும்புகிறேன்’’ என்று, தங்களுக்குத் தெரிந்த எல்லா பிரபலமான ஊழியர்களின் பெயரையும் குறிப்பிட்டு எழுதிக் கொடுத்தனர்.
அதே போல இன்றும் ஊழியம் என்றதும் பவுல் அப்போஸ்தலர் மட்டும்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வருகிறார்.
நல்லதுதான்.
அதையும் தாண்டி சிலர், பேதுரு, அல்லது யோவான் என்று வேதாகமத்தில் பிரபலமாக அறியப்பட்டிருக்கும் அப்போஸ்தலர்களின் பெயரை உச்சரிப்பது உண்டு.

உன்னால் முடியும்


கர்த்தர் நமக்குக் கொடுத்த அதிகாரத்தை நினைவுபடுத்தி, அதிகாரம் உள்ளவர்களாக நடந்துகொள்ளவும், தேவனிடத்தில் பெற்ற அதிகாரத்தைச் செயல்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்றும்  தம்முடைய வார்த்தையின் மூலம் பேச விரும்புகிறார். கர்த்தருடைய இந்த வார்த்தைகளைக் கருத்துடனும், ஜெபத்துடனும் வாசித்துத் தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.
 இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது’’ {லூக்கா 10:19} என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருடைய வழியில் நடக்கும் தேவ பிள்ளைக்ளுக்கு விசேஷமான அதிகாரத்தை இயேசு கிறிஸ்து கொடுத்திருக்கிறார்.
அது என்னவென்றால் சத்துருவின் சகல வல்லமைகளையும் மேற்கொள்ளக்கூடிய வல்லமை. மனிதர்களாயிருக்கிற நம்முடைய வாழ்க்கையில் கண்ணுக்கு மறைவாகப் பல விதமான போராட்டங்களைச் சந்தித்து வருகிறோம், இந்தப் போராட்டங்களுக்கு எல்லாம் காரணக் கர்த்தாவாயிருப்பது, சத்துரு என்று அழைக்கப்படும் பிசாசு.
இந்தச் சத்துருவினுடைய தந்திரங்களை முதலாவது தேவனுடைய பிள்ளைகள் அறிந்துகொள்ளவேண்டும். அதைவிட முக முக்கியமானது சத்துருவினுடைய வல்லமைகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

உண்மை வழி

மதங்களை சுமப்பது மனிதனுக்கு என்றுமே சுமைதான். மதங்கள் ஒன்றுக்கும் உதவாது.

உலகின் எந்த மூலையிலும் வாழும் எந்த மனிதனும்  உறவுகளே, அதை எந்த வகையிலும் பிரித்து பார்ப்பது மனிதனின் அறியாமையையே வெளிக்காட்டும்.

மனிதர் தங்கள் அடையாளங்களை பதிவு செய்ய முயல்கிறார்கள்.மனித மனங்களில் இருக்கும் அறியாமை இருளே கடந்த கால அடையாளங்கள்.

வெளிச்சத்தை பதிவு செய்து இருளை விலக்க முயல்கிறவர்களை மதவாதிகள் எதிர்ப்பது ஒன்றும் புதிய வரலாறு அல்லவே.

"ஜீவ அப்பம்'' (நவம்பர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது. 


எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது.  இந்த மாத ( நவம்பர்  2014) ஜீவ அப்பம் மாத இதழை  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.

தேவ கிருபையால், ஆவியானவரின் ஒத்தாசையுடன  எழுதப்பட்டிருக்கும்  தேவ செய்திகள் கட்டாயம் படிக்கும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.


தவறாமல் பதிவிறக்கி படியுங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
 
மேலும் இந்த மாத இதழைக்குறித்து  உங்கள் கருத்துக்களை கீழே பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.
 
Download link     

click-Jeeva Appam November 2014
                                                                                                                                  6 MB


நமது ஜீவ அப்பம் மாத இதழ் உங்கள் வீடு தேடி வரவேண்டுமானால், உங்களின் விலாசத்தை jeevaappam@gmail.com என்ற மின் அஞ்சல் மூலமாக  அனுப்பலாம். அல்லது, +91 9791047107 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 


உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்ய உங்கள் முக நூல் ( facebook)  பக்கத்தில் Share செய்யுங்கள்