Bread of Life Church India

ஜீவ அப்பம் ஊழியங்களின் செயல்பாடுகள்

”ஜீவ அப்பம் ஊழியங்கள்” வட சென்னை பகுதியிலே திருவொற்றியூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு தனி மனிதனும் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் அவரை பின்பற்றும் சீஷர்களாக, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வேண்டும் என்ற தேவன் கொடுத்த ஆத்தும பாரத்தோடு செயல்பட ஆரம்பித்தோம்.
சிறு ஜெப குழுவாக ஆரம்பிக்கப்பட்ட ஊழியம். பிறகு கைப்பிரதி அச்சிட்டு விநியோகித்து தனி மனித சுவிசேஷ பணியிலே செயல் பட்டோம்.அதன்பின் நாம சந்திக்காத நபர்களையும் பத்திரிக்கை சந்தித்து சுவிசேஷத்தை அறிவிக்கும் என்று கர்த்தருக்குள் நாங்கள் ஜெபித்து தீர்மானிக்க கர்த்தர் உதவி செய்த படியினாலே புத்தகம் வழியாக ”ஜீவ அப்பம்”மாதாந்திர பத்திரிக்கை வழியாக சுவிசேஷத்தை அறிவிக்க தேவன் வாசலை திறந்தார்.
திரளான ஜனங்கள் கூடி சுவிசேஷத்தை கேட்பதற்கு இசைவாக பொது இடங்களில் சுவிசேஷ கூட்டங்கள் நடத்தவும் தேவன் கிருபை செய்கிறார். வேதத்தை ஓவ்வொருவரும் கிரமமாக கற்று தேவனுக்கு சாட்சியாய் வாழ ”வேத பாடக் கூட்டங்கள்” நடத்தவும் தேவன் கிருபை செய்கிறார்.
சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், சபை இல்லாத இடங்களில் சபை ஸ்தாபிக்கவும் தேவன் தரிசனம் தந்துள்ளார்.
ஜீவ அப்பம் ஊழியங்களின் முதல் திருச்சபையாக திருவொற்றியூர், அம்பேத்கார் நகரில் "ஜீவ அப்பம் திருச்சபை'' துவங்கப்பட்டு ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
திரித்துவ  உபதேச அடிப்படையில், பெந்தெகொஸ்தே  அனுபவத்தில் ஆராதனைகளும், ஊழிய செயல்பாடுகளுடன்,
கர்த்தரை மட்டுமே புகலிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம.
புதிய தலைமுறையினர் கிறிஸ்துவை விசுவாசிக்கவும், கிறிஸ்துவில் வளரவும் வேண்டும். நமது தலைமுறை சத்தியத்திலும், மெய்யான நீதியிலும், தன்னை நேசிப்பதைப் போல பிறரை நேசித்து அன்பு கூரவும் வேண்டும் என்ற இயேசு கிறிஸ்துவின் பாரத்தோடு தேவ கிருபையினால் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.இதே எண்ணத்தோடும் பாரத்தோடும் நீங்களும் இருப்பீர்கள் என்றால் உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.

0 comments:

Post a Comment