Bread of Life Church India

Uyirodu Ezhunthar | New Christian worship Song


 









உயிரோடு எழுந்தார் என் உணர்வோடு கலந்தாரே - 2
கண்மணி போல் என்னை காப்பவரே காலமெல்லாம் என்னை சுமப்பரே- 2
துதியும் கனமும் மகிமையுமே உமக்கு செலுத்தி உயர்த்திடுவேன் - 2
உயிருள்ள நாளெல்லாம் உயிருள்ள நாளெல்லாம்

வேதனை துன்பம் நெருக்கத்தில் நெருங்கி வந்து அணைத்தீரே
கதறி அழுத நேரமெல்லாம் அருகில் நின்று தேற்றினீரே - 2
ஒன்றும் இல்லா நேரங்களிலே உதவி செய்து உயர்த்தினீரே
கைவிட பட்டு கலங்கும் போது கரம் பிடித்து தூக்கினீரே
சத்துருக்கள் முன்பாக பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
என் தலையை எண்ணெயினால் அபிஷேகித்து உயர்த்தினீர்

நிலையில்லா இந்த உலகிலே நிம்மதி இன்றி வாழ்ந்தேனே
வெறுமையான வாழ்வில் வந்து நம்பிக்கை நங்கூரமானீரே - 2
நிந்தை அவமானம் யாவும் அகற்றி நித்திய வாழ்வை எனக்கு தந்தீர் கல்வாரியிலே ரத்தம் சிந்தி உந்தன் அன்பால் என்னை மீட்டீர்
பாவ சாப ரோகங்கள் யாவும் அழித்து காத்தீரே
என்னை உமக்காய் தெரிந்து கொண்டு புதிய மனிதனாய் மாற்றினீர்

 

 

 

0 comments:

Post a Comment