Bread of Life Church India

வியாபாரம் செய்தவர்களை இயேசு சாட்டையால் அடித்தது ஏன்?

    

``பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு  எருசலேமுக்குப் போய், தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர்; உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டு பண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக் காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப் போட்டு, புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக் கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.''
( யோவான் 2:13_16).
    இயேசு தேவாலயத்தில் வியாபாரம் செய்தவர்களை
அடித்தது நியாயமா? வியாபாரம் செய்து பிழைத்து போகட்டுமே என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படலாம்.

மரித்த ஆவிகளுக்கு இயேசு பிரசங்கித்தாரா?



வேதாகமத்தின் மிக முக்கியமான மைய செய்தியே இயேசு கிறிஸ்து சிலுவைபாடுகள் பட்டு, மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததுதான்.
இந்த செய்திகள்தான் கிறிஸ்தவத்தின் உயிர்நாடியும், எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்படும் நற்செய்தியுமாக இருக்கிறது. மரித்து உயிர்த்தெழுதல் என்பது உலகம் உண்டானது முதற்கொண்டு, மனித வரலாற்றில் இயேசு கிறிஸ்துவை தவிர இதுவரை வேறு ஒருவராலும் செய்திடாத, செய்தியாக இருக்கிறது.

பாஸ்டர்தான் திருச்சபையை நடத்த வேண்டுமா?

மக்கள் திரளாக கூடிவருகிற இடத்தை சபை என்று சொல்லுவது வழக்கம். திருச்சபை என்ற பதமும் அதே அடிப்படையில் வருகிறதா? என்றால் இல்லை.
இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, மனந்திரும்பி, பாவ மன்னிப்புக்கென்று, ஞானஸ்நானம் பெற்ற ஒருவர், பாவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு, கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிற சபையில் இணைக்கப்படுகிறார். அதாவது பாவத்திலிருந்து வெளியே அழைக்கப்பட்டவர்களே, சபை என்று அழைக்கப்படுகிறது.

கிறிஸ்துவின் சரீரத்தில் இணைக்கப்பட்டவர், விசுவாச வாழ்வில் பலப்படும்படியாகவும், கிறிஸ்துவின் அடிச்சுவட்டில் நடக்கும் படியாகவும், வேத வசனங்களின் படி, போதிக்கப்பட்டு, விசுவாசத்திலும், ஜெபத்திலும், வேண்டுதலிலும், தேவ அன்பிலும் நிலைத்திருக்க, தொடர்ந்து நடக்க, தேவனை ஆராதிக்க, ஐக்கியம் அவசியமாக இருக்கிறது.