Bread of Life Church India

Jeevaappam Jeevageethangal - New Tamil Christian Songs

 

ஜீவ அப்பம் ஜீவ கீதங்கள்.
தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
Jeevaappam Jeevageethangal
New Tamil Christian Songs

Mp3
Songs
Free Download

 

யுத்தத்தில் வல்லவர்
Yuthathil Vallavar Mp3

தாயின் கருவிலே
Thayin Karuvile Ennai 

ஆத்துமா வாஞ்சித்து கதறுதே
Authuma Vanjithu Katharuthe
 

நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து
Nitchayamaga Unnai
 

என்மீதா இத்தனை அன்பு
Enmetha Ithanai Anbu

Thayin Karuvile Ennai | தாயின் கருவிலே | New Christian Worship Song | Re...














தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டீரே
நல்ல தகப்பனாக தினம் என்னை சுமந்து வந்தீரே

தகப்பனே தந்தையே தகப்பனே தந்தையே
உங்க கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே
உங்க பார்வை பட்டதால் என் வாழ்க்கை மாறியதே

ஆகாதவன் என்று நான் தள்ளப்பட்டிருந்
தேன்
வேண்டாம் என்று பலராலும் வெறுக்கப்பட்டிருந்தேன்
தேடி வந்து அன்பை பொழிந்தீரே
உம் கரங்களினால் அணைத்து கொண்டீரே

தகுதியில்லை என்று நான் ஒதுக்கப்பட்டிருந்தேன்
துடைத்து போடும் கந்தை போ
ல எறியப்பட்டிருந்தேன்
உங்க பிள்ளை என்னும் தகுதி தந்தீரே
உம் கிருபையினால் காத்துக்கொண்டீரே

இல்லாதவன் என்று நான் விலக்கப்பட்டிருந்தேன்
மனிதர் பேசும் வார்த்தைகளால் காயப்பட்டிருந்தேன்
என்னை குப்பையிலிருந்து தூக்கி எடுத்தீரே
உம் சிங்காசனத்தில் அமரவைத்தீரே

Nechayamaga Unnai Asirvathithu | நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து | Rev. V.S...












நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து
பெருகவே பெருக பண்ணுவேன்
உன்னை வலதுபுறத்திலும்இடதுபுறத்திலும்
இடங்கொண்டு பெருகிடுவாய்

உன் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்
உன் துக்க நாட்கள் முடிந்து போகும்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.

நீர்பாய்ச்சலான தோட்டமாய் செழிப்பாக மாறப்பண்ணுவேன்
வெட்கப்பட்ட இடத்தில் உன்னை கீர்த்தியும் புகழ்ச்சியாக்குவேன்
உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன்
நீ கீழாகாமல் மேலாகிடுவாய்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.

பட்சித்த வருஷங்களின் விளைச்சல்களை திரும்ப தருவேன்
நன்மையினாலே உன்னை திருப்த்திபடுத்தி
சந்தோஷத்தால் நிறைத்திடுவேன்
உன் பெயரை பெருமை படுத்துவேன்
நீ ஆசீர்வாதமாய் வாழ்ந்திடுவாய்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.

உன் நடுவில் வாசம்பண்ணுவேன் உன்னை கண்மணி போல் காத்திடுவேன்
என் நாவினால் சொன்னவைகளை என் கரத்தினால் செய்து முடிப்பேன்
ஆயிரம் மடங்கு ஆசீர்வதிப்பேன்
நீ கோடா கோடியாய் பெருகுவாய்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.

Enmeetha Ithanai Anbu | என்மீதா இத்தனை அன்பு | Tamil Christian New Song ...















என்மீதா இத்தனை அன்பு
வியந்து பார்க்கின்றேன்
விலையேற பெற்ற உந்தன்
இரத்தத்தால் மீட்டீரே

உம் அன்பின் அகலம் நீளம் உயரம்
உணர்ந்து கொள்ள செய்தீரே
உதவாத என்னையும்
உருவாக்கி மகிழ்ந்தீரே

1. நிந்தைகள் அடைந்தும் அவமானமடைந்தும்
எனக்காக யாவையும் சகித்தீரே..
உமக்கு முன்பாக என்னை வைத்து
சந்தோஷமாக ஏற்றீரே...

2. காரி உமிழ்ந்தும் காயங்கள் பட்டும்
எனக்காக யாவையும் ஏற்றீரே.
உம் அன்பின் உறவில் என்னை சேர்க்க
எனக்காக மரித்தீரே

3. உறவுகள் என்னை வெறுத்த போதும்
உம் அன்பு என்னை தாங்குதையா
சாம்பலான என் வாழ்வை
சிங்காரமாக மாற்றினீரே

 

பாடல் வரிகள்

..... ....................... 

என்மீதா இத்தனை அன்பு
வியந்து பார்க்கின்றேன்
விலையேற பெற்ற உந்தன்
இரத்தத்தால் மீட்டீரே

உம் அன்பின் அகலம் நீளம் உயரம்
உணர்ந்து கொள்ள செய்தீரே
உதவாத என்னையும்
உருவாக்கி மகிழ்ந்தீரே

1. நிந்தைகள் அடைந்தும் அவமானமடைந்தும்
எனக்காக யாவையும் சகித்தீரே..
உமக்கு முன்பாக என்னை வைத்து
சந்தோஷமாக ஏற்றீரே...

2. காரி உமிழ்ந்தும் காயங்கள் பட்டும்
எனக்காக யாவையும் ஏற்றீரே.
உம் அன்பின் உறவில் என்னை சேர்க்க
எனக்காக மரித்தீரே

3. உறவுகள் என்னை வெறுத்த போதும்
உம் அன்பு என்னை தாங்குதையா
சாம்பலான என் வாழ்வை
சிங்காரமாக மாற்றினீரே

Aththuma Vanjithu Katharuthe | ஆத்துமா வாஞ்சித்து | Tamil Christian New ...












ஆத்துமா வாஞ்சித்து கதறுதே
நேசரின் முகத்தை தேடுதே
உம் பாதம் பணிந்து உம்மையே நோக்கி
ஆனந்தம் கொள்ளுதே

பாவ சேற்றில் கிடந்தேன் நான்
கழுவி அணைத்தீரே
நிம்மதியின்றி தவித்த எனக்கு
ஆறுதல் தந்தீரே

நீண்ட தூரம் சென்றேன் நான்
தேடி வந்தீரே
விலகி சென்ற என்னை அணைத்து
அன்பை தந்தீரே

பாலைவனத்தில் கிடந்தேன் நான்
பாதுகாத்தீரே
ஆதரவின்றி இருந்த எனக்கு
உதவி செய்தீரே



யுத்தத்தில் வல்லவர் | Yuthathil Vallavar | New Tamil Christian Song


யுத்தத்தில் வல்லவர்
கர்த்தர் என்பது அவர் நாமம்
சர்வ வல்ல தேவனவர்
சகலத்தையும் ஆள்பவரே
எனக்காக யாவும் செய்து
என்னோடு கூட இருந்து
என்னையவர் நடத்திடுவரே

அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமாய் பாடிடுவேன் அனுதினமும் உயர்த்திடுவேன்

எதிரிகளால் உருவாகும் ஆயுதங்கள் வாய்க்காமல்
காக்கின்ற தேவனவர் என்னோடு இருக்கின்றாரே
எனக்காக வழக்காடி எனக்காக நியாயம் செய்து
நீதியாய் தீர்ப்பு செய்வாரே

உன்னை விட்டு விலக மாட்டேன் உன்னை என்றும் கைவிட மாட்டேன்
என்று சொன்ன தேவனவர் என்னோடு இருக்கின்றாரே
எனக்கு முன்னே அவர் சமூகம் எதைக்குறித்தும் கவலை இல்லை
என்னை என்றும் காத்திடுவாரே

திறந்த வாசலை உனக்கு முன்னே வைக்கின்றேன் என்று சொல்லி
நடத்துகின்ற மீட்பர் இயேசு என்னோடு இருக்கின்றாரே
ஒருவரும் பூட்டாதபடி வாசலை திறந்து வைத்து
என்றென்றும் நடத்திடுவாரே

உலகத்தின் முடிவுவரை சகல நாளும் கூட இருப்பேன்
என்று சொன்ன இயேசு ராஜன் என்னோடு இருக்கின்றாரே
என்னை அவர் பாதுகாப்பார் என்னை அவர் வழி நடத்துவார்
எனக்கென்றும் இயேசு போதுமே