Bread of Life Church India

Showing posts with label Songs. Show all posts
Showing posts with label Songs. Show all posts

Uyirodu Ezhunthar | New Christian worship Song


 









உயிரோடு எழுந்தார் என் உணர்வோடு கலந்தாரே - 2
கண்மணி போல் என்னை காப்பவரே காலமெல்லாம் என்னை சுமப்பரே- 2
துதியும் கனமும் மகிமையுமே உமக்கு செலுத்தி உயர்த்திடுவேன் - 2
உயிருள்ள நாளெல்லாம் உயிருள்ள நாளெல்லாம்

வேதனை துன்பம் நெருக்கத்தில் நெருங்கி வந்து அணைத்தீரே
கதறி அழுத நேரமெல்லாம் அருகில் நின்று தேற்றினீரே - 2
ஒன்றும் இல்லா நேரங்களிலே உதவி செய்து உயர்த்தினீரே
கைவிட பட்டு கலங்கும் போது கரம் பிடித்து தூக்கினீரே
சத்துருக்கள் முன்பாக பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
என் தலையை எண்ணெயினால் அபிஷேகித்து உயர்த்தினீர்

நிலையில்லா இந்த உலகிலே நிம்மதி இன்றி வாழ்ந்தேனே
வெறுமையான வாழ்வில் வந்து நம்பிக்கை நங்கூரமானீரே - 2
நிந்தை அவமானம் யாவும் அகற்றி நித்திய வாழ்வை எனக்கு தந்தீர் கல்வாரியிலே ரத்தம் சிந்தி உந்தன் அன்பால் என்னை மீட்டீர்
பாவ சாப ரோகங்கள் யாவும் அழித்து காத்தீரே
என்னை உமக்காய் தெரிந்து கொண்டு புதிய மனிதனாய் மாற்றினீர்

 

 

 

Jeevaappam Jeevageethangal - New Tamil Christian Songs

 

ஜீவ அப்பம் ஜீவ கீதங்கள்.
தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
Jeevaappam Jeevageethangal
New Tamil Christian Songs

Mp3
Songs
Free Download

 

யுத்தத்தில் வல்லவர்
Yuthathil Vallavar Mp3

தாயின் கருவிலே
Thayin Karuvile Ennai 

ஆத்துமா வாஞ்சித்து கதறுதே
Authuma Vanjithu Katharuthe
 

நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து
Nitchayamaga Unnai
 

என்மீதா இத்தனை அன்பு
Enmetha Ithanai Anbu

Thayin Karuvile Ennai | தாயின் கருவிலே | New Christian Worship Song | Re...














தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டீரே
நல்ல தகப்பனாக தினம் என்னை சுமந்து வந்தீரே

தகப்பனே தந்தையே தகப்பனே தந்தையே
உங்க கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே
உங்க பார்வை பட்டதால் என் வாழ்க்கை மாறியதே

ஆகாதவன் என்று நான் தள்ளப்பட்டிருந்
தேன்
வேண்டாம் என்று பலராலும் வெறுக்கப்பட்டிருந்தேன்
தேடி வந்து அன்பை பொழிந்தீரே
உம் கரங்களினால் அணைத்து கொண்டீரே

தகுதியில்லை என்று நான் ஒதுக்கப்பட்டிருந்தேன்
துடைத்து போடும் கந்தை போ
ல எறியப்பட்டிருந்தேன்
உங்க பிள்ளை என்னும் தகுதி தந்தீரே
உம் கிருபையினால் காத்துக்கொண்டீரே

இல்லாதவன் என்று நான் விலக்கப்பட்டிருந்தேன்
மனிதர் பேசும் வார்த்தைகளால் காயப்பட்டிருந்தேன்
என்னை குப்பையிலிருந்து தூக்கி எடுத்தீரே
உம் சிங்காசனத்தில் அமரவைத்தீரே

Nechayamaga Unnai Asirvathithu | நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து | Rev. V.S...












நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து
பெருகவே பெருக பண்ணுவேன்
உன்னை வலதுபுறத்திலும்இடதுபுறத்திலும்
இடங்கொண்டு பெருகிடுவாய்

உன் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்
உன் துக்க நாட்கள் முடிந்து போகும்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.

நீர்பாய்ச்சலான தோட்டமாய் செழிப்பாக மாறப்பண்ணுவேன்
வெட்கப்பட்ட இடத்தில் உன்னை கீர்த்தியும் புகழ்ச்சியாக்குவேன்
உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன்
நீ கீழாகாமல் மேலாகிடுவாய்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.

பட்சித்த வருஷங்களின் விளைச்சல்களை திரும்ப தருவேன்
நன்மையினாலே உன்னை திருப்த்திபடுத்தி
சந்தோஷத்தால் நிறைத்திடுவேன்
உன் பெயரை பெருமை படுத்துவேன்
நீ ஆசீர்வாதமாய் வாழ்ந்திடுவாய்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.

உன் நடுவில் வாசம்பண்ணுவேன் உன்னை கண்மணி போல் காத்திடுவேன்
என் நாவினால் சொன்னவைகளை என் கரத்தினால் செய்து முடிப்பேன்
ஆயிரம் மடங்கு ஆசீர்வதிப்பேன்
நீ கோடா கோடியாய் பெருகுவாய்
கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார்.

Enmeetha Ithanai Anbu | என்மீதா இத்தனை அன்பு | Tamil Christian New Song ...















என்மீதா இத்தனை அன்பு
வியந்து பார்க்கின்றேன்
விலையேற பெற்ற உந்தன்
இரத்தத்தால் மீட்டீரே

உம் அன்பின் அகலம் நீளம் உயரம்
உணர்ந்து கொள்ள செய்தீரே
உதவாத என்னையும்
உருவாக்கி மகிழ்ந்தீரே

1. நிந்தைகள் அடைந்தும் அவமானமடைந்தும்
எனக்காக யாவையும் சகித்தீரே..
உமக்கு முன்பாக என்னை வைத்து
சந்தோஷமாக ஏற்றீரே...

2. காரி உமிழ்ந்தும் காயங்கள் பட்டும்
எனக்காக யாவையும் ஏற்றீரே.
உம் அன்பின் உறவில் என்னை சேர்க்க
எனக்காக மரித்தீரே

3. உறவுகள் என்னை வெறுத்த போதும்
உம் அன்பு என்னை தாங்குதையா
சாம்பலான என் வாழ்வை
சிங்காரமாக மாற்றினீரே

 

பாடல் வரிகள்

..... ....................... 

என்மீதா இத்தனை அன்பு
வியந்து பார்க்கின்றேன்
விலையேற பெற்ற உந்தன்
இரத்தத்தால் மீட்டீரே

உம் அன்பின் அகலம் நீளம் உயரம்
உணர்ந்து கொள்ள செய்தீரே
உதவாத என்னையும்
உருவாக்கி மகிழ்ந்தீரே

1. நிந்தைகள் அடைந்தும் அவமானமடைந்தும்
எனக்காக யாவையும் சகித்தீரே..
உமக்கு முன்பாக என்னை வைத்து
சந்தோஷமாக ஏற்றீரே...

2. காரி உமிழ்ந்தும் காயங்கள் பட்டும்
எனக்காக யாவையும் ஏற்றீரே.
உம் அன்பின் உறவில் என்னை சேர்க்க
எனக்காக மரித்தீரே

3. உறவுகள் என்னை வெறுத்த போதும்
உம் அன்பு என்னை தாங்குதையா
சாம்பலான என் வாழ்வை
சிங்காரமாக மாற்றினீரே