Bread of Life Church India

En Jeevanulla Naatkalellaam | New Christian Worship Song | Kirubai song

 

 

 

 

 

 

என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உம்மை துதித்திடுவேன்
உம் நாமத்தையே சொல்லி சொல்லி
உயர்த்தி மகிழுவேன்
ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை நல்லது
உம் கிருபையால் என்னை நிரப்பிடுமே

வரண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்ற நிலத்தில்
என் ஆன்மா உம்மீதே தாகமாய் என்றுமே உள்ளதே
என் தேவனே உம்மை ஆதிகாலமே
தினம் தினம் தேடுவேன்
தினம் தினம் தேடுவேன்

நிணத்தையும் கொழுப்பையும் உண்டது போலவே
என் மனம் உம் மீதே திருப்தியாகி தினமும் மகிழுதே
என் துணையாளரே உம்மில் களிகூரவே
உம் மார்பில் சாய்ந்திடுவேன்
உம் மார்பில் சாய்ந்திடுவேன்

படுக்கையிலும் உம்மை நினைக்கிறேன்
இராச்சாமத்தில் தியானிப்பேன்
உமது மகிமை வல்லமையை கண்டு துதிக்கிறேன்
உம்முகமே தினம் கண்டிடவே ஆவலாய்
உள்ளதே ஆவலாய் உள்ளதே


0 comments:

Post a Comment