Bread of Life Church India

Siluvaiyil Sinthiya Rathathinale | New Christian song


 









சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே
சமாதானத்தை உண்டு பண்ணினீர்
பாவியாகவே இருந்த எங்களை
பரிசுத்தமாய் மாற்றி விட்டீரே

ஆராதனை ஆராதனை
ஜீவனை பலியாக தந்தவர்கே
ஆராதனை ஆராதனை
அன்பராம் எந்தன் இயேசுவுக்கே

மகிமையின் நம்பிக்கையாக
எங்களுக்குள் இருப்பவரே
தம்முடைய இராஜ்யத்திற்கும்
மகிமைக்கும் அழைத்துக்கொண்டீர் - ஆராதனை

மரணத்தையும் பாதாளத்தையும்
சிலுவையிலே வென்று விட்டவரே
ஜீவனையும் அழியாமையையும்
கிருபையாக தந்துவிட்டீர் - ஆராதனை

0 comments:

Post a Comment