Bread of Life Church India

Irakkamaai Iruntheer | New Christian Worship Song











இரக்கமாய் இருந்தீர் மனதுருக்கமாய் இருந்தீர்
ஆயிரம் தலைமுறை மட்டும் இரங்குவேன் என்றீர்
இமைபொழுதும் என்னை மறக்க வில்லையே
நான் விலகி சென்றும் விட்டு விலக வில்லையே

மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்
கிருபையோ விலகாதென்றீர்
சமாதான உடன்படிக்கை செய்தீர்

அநாதி சிநேகத்தினால்
என்னையும் நேசித்தீரையா
காருண்ய கேடகத்தால்
என்னையும் இழுத்துக்கொண்டீரே

எனது வழிகளெல்லாம்
உம் சமுகம் முன் செல்லுதே
வாழ்கின்ற காலமெல்லாம்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்


0 comments:

Post a Comment