Showing posts with label ஆசிரியர் கடிதம். Show all posts
Showing posts with label ஆசிரியர் கடிதம். Show all posts
உள்ளத்திலிருந்து உங்களுடன்
கிறிஸ்துவுக்குள் இனிமையான ஜீவ அப்பம் வாசகர்களே,
சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்
அன்பின் வாழ்த்துக்கள்.
மறுபடியும் உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேரில் உங்களில் சிலரை
காண முடியாவிட்டாலும், தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக உங்களை சந்திப்பதில்
மிகுந்த சந்தோஷப்படுகிறேன்.
நம்முடைய தலைமுறையில் தேவன் நமக்கு கொடுத்த
பொறுப்புக்களை சரியாக உணர்ந்து செயல்படுத்த
வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும்
ஜீவ அப்பம், இந்த தலைமுறையில்
அநேகர் கிறிஸ்துவுக்குள் வளர்ந்து பெருகவும், கிறிஸ்துவுக்குள் கட்டப்படவும்
செயல்பட்டு வருகிறது.
உங்களுடன் ஒரு நிமிடம்
கிறிஸ்துவுக்குள் பிரியமான ஜீவ அப்பம் குடும்ப,
வாசக அன்பர்களுக்கு, நித்திய தேவனாகிய இயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இந்த புதிய ஆண்டில் மறுபடியும் உங்களைச் சந்திப்பதில்
மிகுந்த மகிழ்ச்சி.
ஜீவ அப்பம் மாத இதழ் தேவனால் கொடுக்கப்பட்ட
ஊழியம் என்பதை கர்த்தர் மறுபடியும் உணர்த்தி இருப்பதால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இந்த ஊழியத்தில் தேவனுடைய கரம் இருப்பதினால் தேவனுக்கே
மகிமை உண்டாவதாக.
இந்த 2017 புதிய வருடத்தில் புதிய கிருபைகளை,
நன்மைகளை, ஆசீர்வாதங்களை கர்த்தர் நிறைவாக தருவாராக.
கடந்த சில மாதங்கள் நமது ஜீவ அப்பம் மாத
இதழ் வெளியிட முடியாமல் தடைகள் காணப்பட்டன. அநேகர் போன் மூலமாக விசாரித்தீர்கள் நன்றி.
இந்த மாத இதழுக்காக சிலர் பிரயாசப்படுகிறீர்கள், ஜெபிக்கிறீர்கள், உங்கள் குறைவுகளிலும்
இந்த ஊழியத்தை தாங்குகிறீர்கள், நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
மாற்றத்தின் மறுபக்கம்
இந்த
ஆண்டில் மூன்றாம் மாதத்தில் உங்கள் அனைவரையும்
சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
ஒருசில காரணங்களால், கடந்த சில மாதங்களாக நமது ஜீவ அப்பம்
மாத இதழ் வெளிவரவில்லை, இணையத்திலும் செய்திகளை
வெளியிட முடியவில்லை. அநேகர் விசாரித்தீர்கள், ஜெபித்தீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
இந்த
ஆண்டில் தொடர்ந்து நமது ஜீவ அப்பம் வெளியிட தேவன் நமக்கு உதவி செய்வாராக.
கடந்த
ஆண்டு, தேவ கிருபையால் தேவனுடைய ஊழியத்தை செய்ய கர்த்தர் நமக்கு உதவி செய்தார். தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
தேவ
பிள்ளைகளாகிய நம்முடைய ஒவ்வொருவருடைய செயல்களும், முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றே
கர்த்தர் எதிர்பார்க்கிறார். தேவனோடு ஐக்கியப்பட்டு, மற்றவர்களை தேவனுடைய ஐக்கியத்துக்குள்ளாக
கொண்டுவருவதும், விசுவாச வாழ்வில் நாம் வளர்ந்து, மற்றவர்களையும் விசுவாச வாழ்வில்
வளர்வதற்கு வேண்டிய உதவிகளை செய்வதற்குமே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
சத்தியமுள்ள, சத்தான சந்ததியே.......
கிறிஸ்துவுக்குள் பிரியமான என் அன்பு ஜீவ
அப்பம் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் இயேசு
கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் வாழ்த்துக்கள்.
நமது ஜீவ அப்பம்
மூலம் உங்களை சந்திப்பதில் மிகுந்த
மகிழ்ச்சி அடைகிறேன். தேவனுடைய மேலான கிருபையும். இரக்கமுமே,
நமது மாத இதழ் வருவதற்கு
மிக முக்கிய காரணம்.
பல நெருக்கடிகள் மத்தியில்தான்
உங்கள் கரங்களில் இந்த புத்தகமானது தவழ்ந்து
கொண்டிருக்கிறது. அத்தனை நெருக்கங்களையும் தாண்டி
இந்த புத்தகத்தை உங்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதற்கு காரணம், எதாகிலும் ஒருவார்த்தை
உங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவுக்குள்ளான மறுரூபத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்பதற்காகத்தான்.
நமது சிந்தனை, எண்ணங்கள்
கிறிஸ்துவைப்போல் மாற்றத்தை பெற்றுவிட வேண்டும். இதுதான் நமது வாழ்க்கையில்
இருக்கும் பொல்லாத அரண்களை நிர்மூலமாக்கும்.
அஸ்திவாரம்
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் குடும்ப
அங்கத்தினர்களுக்கு, தேனிலும் இனிமையான இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் அன்பான
வாழ்த்துக்கள்.
பிரியமானவர்களே, நமது ஜீவ அப்பம் ஊழியங்களை
கர்த்தர் ஆசீர்வதித்து, எல்லைகளை விரிவாக்கி
வருவதால் கர்த்தரை நன்றியோடு ஸ்தோத்தரித்து, துதிப்போம்.
தேவனுடைய வார்த்தைகளை அறிவிக்கவும், அநேகர்
தேவனுடைய வார்த்தைகளினாலே விடுவிக்கப்படவும், ஆசீர்வதிக்கப்படவும் ஜீவ அப்பம் மாத இதழை
தேவன் பயன்படுத்தி வருகிறார்.
பயனுள்ள கருவிகளாய்.........
கிறிஸ்துவுக்குள் பிரியமான ஜீவ அப்பம் அன்பு வாசக குடும்பத்திற்கு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபத்துடன் வாழ்த்துக்கள்.
இம்மட்டுமாக நம்மைக் காத்து வழி நடத்தி வரும் இம்மானுவேலாகிய தேவனுக்கு எல்லா கனமும், மகிமையும் துதியும் உண்டாவதாக.
நமது ஜீவ அப்பம், ஊழியங்களையும், ஜீவ அப்பம் மாத இதழையும் ஆசீர்வதித்து நடத்தி வரும், அன்பான தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம்.
ஜீவ அப்பம் ஊழியமானது தேவனுடைய கிருபையால் அநேகருக்கு ஆசீர்வாதமாக தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார். இந்த ஊழியமானது இன்னும் விரிவடைந்து அநேகருக்குப் பயனுள்ளதாக இருக்க ஜெபியுங்கள்..
அறிவு, இறுமாப்பையும், அன்பு பக்தி விருத்தியடையவும் செய்யும் என்ற வேத வார்த்தையின் படி, அறிவு பெருகிக்கொண்டிருக்கும், தற்கால உலகில் அன்பு குறைந்து கொண்டிருக்கிறது.
இம்மட்டுமாக நம்மைக் காத்து வழி நடத்தி வரும் இம்மானுவேலாகிய தேவனுக்கு எல்லா கனமும், மகிமையும் துதியும் உண்டாவதாக.
நமது ஜீவ அப்பம், ஊழியங்களையும், ஜீவ அப்பம் மாத இதழையும் ஆசீர்வதித்து நடத்தி வரும், அன்பான தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம்.
ஜீவ அப்பம் ஊழியமானது தேவனுடைய கிருபையால் அநேகருக்கு ஆசீர்வாதமாக தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார். இந்த ஊழியமானது இன்னும் விரிவடைந்து அநேகருக்குப் பயனுள்ளதாக இருக்க ஜெபியுங்கள்..
அறிவு, இறுமாப்பையும், அன்பு பக்தி விருத்தியடையவும் செய்யும் என்ற வேத வார்த்தையின் படி, அறிவு பெருகிக்கொண்டிருக்கும், தற்கால உலகில் அன்பு குறைந்து கொண்டிருக்கிறது.
நம் கரங்கள் இணைந்தால்......
கிறிஸ்துவுக்குள் மிகவும் அன்பான ஜீவ
அப்பம் குடும்ப அங்கத்தினர்களுக்கு இயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் அன்பான வாழ்த்துக்கள்.
ஜீவ அப்பம் மாத
இதழ் மூலமாக உங்களுடன் பேசும்படியாக
உதவி செய்து வரும் தேவனை
நன்றி நிறைந்த இருதயத்துடன் ஸ்தோத்தரிக்கிறேன்.
ஒவ்வொரு மாதமும் தேவைகளை
சந்தித்து, இந்த ஊழியங்கள் சிறப்பாக
நடைபெறவும், மாத இதழ் வெளியிடவும்,
அநேக ஆத்துமாக்களை சந்தித்து, சத்தியத்தை அறிவிக்கவும், இரக்கம் பாராட்டி வரும்
தேவாதி தேவனை துதிக்கிறேன்.
அன்பு தேவனுடைய பிள்ளைகளே,
நம்முடைய வாழ்வு, ஏனோ, தானோ
என்ற வாழ்வு அல்ல, அர்த்தம்
நிறைந்த வாழ்வு, நோக்கம் இல்லாமல்
தேவன் நம்மை தெரிந்து கொள்ள
வில்லை, திட்டமில்லாமல் நம்மை இரட்சிக்கவும் இல்லை.
எதை நோக்கி பயணிக்கிறது?
சில நாட்களுக்கு முன் ஒரு எழுத்தாளரின் புத்தக வெளியீட்டு விழா விற்கு இன்னொரு மதத்தை சார்ந்த என்னுடைய நண்பர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப் பட்டிருந்தார். அந்த பாராட்டு விழாவிற்கு நண்பர் மூலமாக நானும் அழைக்கப்பட்டு, அவருடன் சென்றிருந்தேன்.
அங்கு நடைபெற்ற விஷயங்கள் முற்றிலும் மாறுபட்டவைகளாக இருப்பினும் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒவ்வொரு விஷயங்களையும் அமர்ந்தபடியே என் மனதில் உள்வாங்கி,சிந்திக்கலானேன்.
எழுத்துலகில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட புராணத்தை நாவல் வடிவமாக்கிக் கொண்டிருக்கிறார், அந்த நூல்களின் வெளியீட்டு விழா, அந்த நூல் வரிசைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.
அந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு பிரபலங்கள் பலர் அழைக்கப்பட்டிருக்க அதில் என்னைக் கவர்ந்த விஷயங்கள் என்னவென்றால் தான் எந்த புராணத்தை நாவல் வடிவமாக்கிக் கொண்டிருக்கிறாறோ, அதே புராணத்தை தங்கள் சொற்பொழிவுகளிலும், மொழியாக்கத்திலும், ஒவியங்களிலும் பிரபலப்படுத்திக்கொண்டிருக்கும் தன் சகாக்களைக் கண்டறிந்து அவர்களை அழைத்து, சிறப்பித்து, வாழ்த்தி, கனப்படுத்தி, உற்சாகப்படுத்தி, கௌரவித்து, பாராட்டி, மெமோண்டோ கொடுத்தார் அந்த எழுத்தாளர்.
அதில் எனது நண்பரும் ஒருவர், அவர் அந்த புராணத்தை மொழியாக்கம் செய்து கொண்டிருக்கிறார்.
மனந்திறந்து உங்களுடன்
அன்பு ஜீவ அப்பம்
இணைய வாசகர்களே, உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து
இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
நமது ஜீவ அப்பம்
வலைபூ தேவனுடைய கிருபையினால், தொடர்ந்து வருகிறது. இந்த வலைபூவின் மூலமாக இணையத்தில் ஆவிக்குரிய
சத்தியங்களை எழுதவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவிக்கவும், இணையத்தின் வழியாக தேவனுடைய ஊழியங்கள்
செய்து வருகிறோம்,.
சரியான நட்பு வேண்டும்
ஒரு முறை நான் பேருந்து
நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அந்த வேளையில் இரண்டு நண்பர்கள்
பேசிக்கொண்டிருந்தார்கள், பேருந்து வந்ததும் அதில்
ஒருவர், வேகமாக
பேருந்தில் ஏறப்போக கூட பேசிக்கொண்டிருந்த மனிதர். அவரை பேருந்தில் ஏறவிடாமல் கையை
பிடித்து இழுத்தார்.
உடனே அந்த மனிதர். “ஏய் கைய விடுடா, இன்றைக்காவது நான்
வேலைக்கு போக வேண்டும், மூன்று நாளா லீவு போட்டதால வீட்டல ஒரே சண்ட, விட்டு விடு, என்று சொல்லி கையை உதறி
விட்டு பேருந்தில் ஏற முயற்சிக்க, அந்த நபர் “சீ கீழ எரங்கு, என்ற படி படியில் ஏறிய அந்த நபரை வலுக்கட்டாயமாக இழுத்து
இறக்கி விட்டார் பேருந்து சென்று விட்டது.
அந்த நபர் எவ்வளவோ கெஞ்சியும்
எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கையை
பிடித்து இழுத்துக்கொண்டே பேருந்து நிருத்தத்தை விட்டு நடக்க ஆரம்பிக்க “டேய் இன்னிக்கி நா வரல, வேலைக்கு போறேன்னு வீட்ல
சொல்லிட்டு வந்துட்டேன். போலன்னா வீட்ல பிரச்சன பெருச ஆயிடும் நா வரல’’ என்று எவ்வளவோ, மன்றாடி கேட்டும் அந்த
நபர் விடுவதாக இல்லை. “யேய் என்ன ரொம்ப அலட்டிக்கிற, செலவ நான் பாத்துக்கிறேன்,
நீ வா’’ என்று பிடித்த பிடியை
விடாமல் வலுக்கட்டாயமாக அந்த நபரின் கையை பிடித்து இழுத்துக்கொண்டே சென்றான்.
“யேய், யேய் வேண்டாண்ட தலைவேற வலிக்குது,
இன்னைக்கும் அங்க
போன நல்லா இருக்காது’’ என்று எவ்வளவோ கெஞ்சியும் அந்த நபர் விடுவதாக இல்லை என்பதை அறிந்து, கடைசியில் வேறு வழி
இல்லாமல் கூடவே போய்விட்டார்.
இதை எல்லாம்
கவனித்துக்கொண்டிருந்த நான் என்னதான் நடக்கிறது என்பதை கொஞ்சம் யூகித்து விட்டேன்.
எனக்கு கோபமாக வந்தது ஆனாலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம்
வேறு மனதுக்குள்ளாக இருந்தது, இருப்பினும் அமைதியாக நானும் அவர்களை பின் தொடர்ந்தேன்.
என்னதான் நடக்கிறது பார்த்து விடலாம் என்று. சிறிது தூரம் சென்றதும்.
நான் என்ன யூகித்தேனோ, அது அப்படியே நடந்தது,
சிறிது தூரத்தில்
இருந்த “டாஸ்மாக்’’
கடைக்குள் இருவரும்
சென்றனர்.
‘வேலைக்கு போகிறேன் என்று சொன்ன நபருக்கு, குடும்பம் இருக்கிறது.
அவர் வேலைக்கு போனால்தான் அந்த குடும்பம் நடக்கும், குடிகார கணவனை திட்டி, குடும்ப நிலையை விளக்கி,
சாப்பாடு
கட்டிக்கொடுத்து, மனைவி வேலைக்கு அனுப்பி இருக்கிறாள் என்பது அந்த நபரின் பேச்சில் இருந்து
தெரிந்தது.
ஆனால் அந்த நபரோ, இன்னொருவனால் வலு
கட்டாயமாக டாஸ்மாக் கடைக்குள் இழுத்து செல்லப்பட்டு, மறுபடியுமாக குடிக்க வைக்கப்பட்டு, அந்த மனைவி, பிள்ளைகளின் எதிர்பார்ப்பை தகர்த்து, குடும்பத்தில் குழப்பத்தை
ஏற்படுத்தி விட்டானே, என்று என் மனம் எரிய ஆரம்பித்தது.
அன்றைக்கு நான் எதுவும் பேசாமல் வந்து விட்டாலும்
இன்னும் அந்த நினைவு என்னை விட்டு அகல வில்லை.
இன்றும் இப்படி அநேக இடங்களில்
நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதற்கெல்லாம் காரணம் என்ன வேண்டாத
நபர்களுடன் நட்பு வைத்துக்கொள்வதுதான், தவறான நட்பு தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது.
நாம் பழகும் நபர்கள் யார்?
அவர்கள் எப்படி
பட்டவர்கள் என்பதை கவனிக்க வேண்டும்.
குடி என்பது இன்றைக்கு அநேகருக்கு
“ஜாலி’’
ஆனால் அதினால்
அழிந்து கொண்டிருக்கும் குடும்பங்கள் ஏராளம்.
விளையாட்டாய் குடிக்கு அடிமையாகி,
அதன் மூலமாக
சீரழியும் குடும்பங்கள் எத்தனை எத்தனை. நண்பர்கள் என்ற போர்வையில் குடிக்கு
அடிமைப்படுத்தி, சீரழிக்கிறவர்கள் எத்தனை பேர்.
எல்லாவற்றிற்றுகும் கணக்கு
பார்க்கும் சில மனிதர்கள் இந்த குடிக்கு மட்டும் கணக்கு பார்க்கிறதே இல்லை.
குடியின் அபாயம் தெரிந்தும் சிலர்
அந்த குடிக்கு அடிமையாக இருப்பதுதான் மிகுந்த வேதனை.
அன்றாடம் கூலி வேலை செய்யும்
நபரின் குடும்பத்திற்குள் சென்று பார்த்தால் பரிதாபம்.
வேலைக்கு சென்று சம்பளம்
வாங்கியதும் நேராக குடிக்கவே செல்கிறான்
தினம் தோரும் ஒழுங்காக வேலைக்கு
போய் சம்பளத்தை வீட்டில் கொடுத்தால் அந்த குடுப்பம் ஏழையாக இருக்காது. ஒரு சில
நாட்கள் உண்மையில் வேலை இல்லை என்றாலும்,
வீண் செலவு
இல்லை என்றால் அழகாக குடும்பத்தை நடத்த முடியும்.
ஆனால் நடப்பது அதுவா. ஒருநாள்
வேலைக்கு போனால் வேலை இருந்தாலும் பல நாள் வேலைக்கு செல்வது இல்லை. காலையில்
ஆரம்பித்து இரவு வரை போதையிலேயே இருக்கிறான். குடும்பத்தைக் குறித்த அக்கரை இல்லை,
பிள்ளைகளை குறித்த
அக்கரை இல்லை. பணக்காரன் முதல் ஏழைவரை,
வாலிபன் முதல்
கிழவன் வரை, குடி பேஷன் ஆகி விட்டது.
சந்தோஷம் வந்தாலும் குடி, துக்கம் வந்தாலும் குடி,
கல்யாண வீட்டிற்கு
சென்றாலும் குடி, இழவு வீட்டிற்கு சென்றாலும் குடி, குடி, குடி எங்கும் எதிலும் குடி, ஆபிஸ் பார்ட்டி ஆனாலும் குடி,
இருவர்
சந்தித்தாலும் குடி,
இந்த குடி என்பது ஒரு பிசாசு என்பது அநேகருக்கு தெரிய
வில்லை. இந்த பிசாசின் பிடியில் நாளுக்கு நாள் அநேகர் சிக்கி கொண்டிருக்கிறார்கள்.
இந்த பிசாசு மனிதருக்குள்ளாக புகுந்து குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கிறது.
இந்த பிசாசுக்கு முற்றுப்புள்ளி
வைத்து, தனி மனிதனையும் குடும்பங்களையும் விடுவிக்க வேண்டுமானால் ஒருவர் இயேசு
கிறிஸ்துவுக்குள்ளாக மனந்திரும்பி வர வேண்டும்.
எந்த நிலையிலும் குடி என்ற பிசாசை
அருகில் வரவிடாதபடிக்கு விரட்டி அடிக்க வேண்டுமானால் இயேசு கிறிஸ்துவின்
அடிச்சுவடுகளை உண்மையாக பின்பற்ற வேண்டும்.
குடி என்ற பிசாசின் பிடியில்
இருந்து விடுபட வேண்டுமானால் சுய முயற்சி உதவாது இயேசு கிறிஸ்துவே விடுதலை
தருகிறார்.
எச்சில் கைகள்

ஊழியங்களிலும், ஊழிய அழைப்பிலும், வித்தியாசங்கள் உண்டு. வேதாகமத்தில்
அப்போஸ்தலர்கள் ஒவ்வொருவரும் தங்களின் அழைப்பின்படி ஊழியத்தை நிறைவேற்றினர். அதில்
அவர் ஊழியம் சிறந்தது, இவர் ஊழியம் குறைந்தது என்று எதையும் சொல்ல முடியாது.
இந்த காலத்திலும் அவரவர் அழைக்கப்பட்டுள்ள
ஊழியத்தில் நிலைத்திருப்பது நல்லது. நிறை குறை எல்லோரிடத்திலும் உண்டு. குறைகளை
மட்டும் நோக்கினால் ஒருவர் கூட தேறமாட்டோம் . இது தான் உண்மை.
இப்போதும் சிலர் சொல்லுவதை
கேட்டிருக்கிறேன். நான் பவுலைப்போல ஊழியம் செய்கிறேன். நான் அவரைப்போல ஊழியம்
செய்கிறேன், நான் இவரைப்போல ஊழியம் செய்கிறேன் என்று சொல்லி விட்டு, அப்படிப்பட்டவர்களின் ஊழிய வழிகளை
நோக்கி பார்ப்பது இல்லை.
உங்களோடு ஒரு நிமிடம்
தேவனுடைய இராஜ்ஜியத்தில் நாம் பங்கு பெறும் படிக்கு நமக்காக தம்முடைய இரத்தத்தை சிந்தி, நம்மை தேவனுடைய இராஜ்ஜியத்துக்கு பங்குள்ளவர்களாக மாற்றிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.
தொடர்ந்து ``நமது ஜீவ அப்பம் மாத இதழ் வெளியிடும்படியாக கிருபை கொடுத்து தாங்கி நடத்திவரும் தேவாதி தேவனைத் துதிக்கிறேன்.
கடந்த மாதத்தில் ஜீவ அப்பம் மாத இதழ் ஆசீர்வாதமாக இருந்தது என்று அநேகர் தொலைபேசி வழியாக தெரிவித்தார்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
தற்போது அநேக இடங்களுக்கு மாத இதழ் அனுப்பி வைக்கப்படுவதால், அநேகர் தொடர்பு கொண்டு, ஜீவ அப்பம் எங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது, தொடர்ந்து எங்களுக்கும் அனுப்பி தாருங்கள் என்று தங்கள் விலாசத்தை கொடுத்திருக்கிறார்கள்.
பிரியமானவர்களே, நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கள் ஏராளம். அவைகளை அறிந்தவர்களாக உணர்ந்தவர்களாக நாம் செயல்படவேண்டியது அவசியம்.
இன்னும் பிரதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது இருப்பதால், இதற்கு தேவைகள் அதிகமாகிறது.
ஒவ்வோரு மாதமும் புத்தகம் வெளியிடுவது சாதாரணமான காரியம் அல்ல, ஒவ்வோரு இதழும் சவாலாகத் தான் வெளியிடப்படுகிறது, தேவனுடைய கிருபையும், தேவனுடைய துணையும் இல்லாமல் இருக்குமானால் கட்டாயமாக இப்புத்தகம் வெளியிட முடியாது எல்லா கனமும் மகிமையும் தேவனுக்கே உண்டாவதாக!
இந்த வருடத்தில் பிப்ரவரி மாதம் முதல் எல்லாமாதமும். தொடர்ச்சியாக ஜீவ அப்பம் வெளியிட தேவன் கிருபை செய்து வருகிறார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இதற்கு தேவ பிள்ளைகளாகிய உங்களின் ஜெபமும், நீங்கள் கொடுக்கும் ஒத்துழைப்பும் முக்கிய காரணம்.
தொடர்ந்து உங்களின் ஜெபமும் ஒத்துழைப்பும் தேவை, கர்த்தரை மட்டுமே சார்ந்து, விசுவாசத்துடன் இந்த ஊழியம் நடை பெற்று வருகிறது. நீங்கள் இந்த ஊழியத்தில் பங்கு எடுத்து செயல் படும் போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நிச்சயமாக உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். எல்லா வித நன்மைகளையும் பெற்று நீங்கள் சுகத்துடன் வாழ்வீர்கள்.
இந்த ஊழியத்துடன் இணைந்து செயல்படும் போது, நீங்களும் ஊழியம் செய்ய ஆரம்பிக்கிறீர்கள். இந்த ஊழியத்தின் மூலமாகவும், நமது ஜீவ அப்பம் மாத இதழ் மூலமாகவும் இரட்சிக்கப்பட்டு, மக்கள் ஆசீர்வதிக்கப்படும் போது அந்த ஆசீர்வாதத்தின் பலனை கர்த்தர் உங்கள் கணக்கில் கொண்டு வருவார்.
புத்தக ஊழியம் ஒரு மிஷனரியாக செயல்படக்கூடியது. எப்படி என்றால் நாம் நேரடியாக சென்று சொல்ல முடியாத இடங்களுக்கும் தேவனுடைய வார்த்தைகளை இந்த புத்தகத்தின் மூலமாக நாம் எழுதி அனுப்ப முடியும். நாம் போக முடியாத இடங்களுக்கும் வீடுகளுக்கும் இப்புத்தகம் சென்று, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவித்து,தேவனுடைய வார்த்தையை சொல்லி, இயேசு கிறிஸ்துவை அறிந்திராத அநேகரை இரட்சிப்புக்கு நேராக நடத்துகிறது.
உலகத்தின் நெருக்கத்தால் சூழ்நிலைகள் எதிராக இருக்கும் போது சோர்ந்து இருக்கும் தேவ பிள்ளைகளை உற்சாகப் படுத்தி, விசுவாசத்தில் உறுதியாக நிற்க தேவனுடைய வார்த்தையால் பெலப்படுத்துகிறது. நமது ஜீவ அப்பம் மாத இதழ் ஒரு மிஷனரியாக செயல்படுகிறது. எனவே ஜீவ அப்பம் மாத இதழ் என்னும் மிஷனரியை தாங்குங்கள்.
அன்பானவர்களே இந்த ஊழியத்தில் இதுவரை நீங்கள் பங்கு எடுக்காமல் இருந்தால் உடனடியாக பங்கு எடுக்க முன் வாருங்கள். கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதித்து உங்களை உயர்த்துவதை நீங்கள் காண்பீர்கள்.
தொடர்ந்து உங்களுக்காக ஜெபிக்கிறோம். தேவாதி தேவன் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சமாதானத்தினால் நிறைத்து, ஒரு குறைவும் இல்லாமல் நல்ல சுகத்துடனும் பெலத்துடனும், சந்தோஷமாக வாழ கிருபை தருவாராக ஆமேன்.
தொடர்ந்து ``நமது ஜீவ அப்பம் மாத இதழ் வெளியிடும்படியாக கிருபை கொடுத்து தாங்கி நடத்திவரும் தேவாதி தேவனைத் துதிக்கிறேன்.
கடந்த மாதத்தில் ஜீவ அப்பம் மாத இதழ் ஆசீர்வாதமாக இருந்தது என்று அநேகர் தொலைபேசி வழியாக தெரிவித்தார்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
தற்போது அநேக இடங்களுக்கு மாத இதழ் அனுப்பி வைக்கப்படுவதால், அநேகர் தொடர்பு கொண்டு, ஜீவ அப்பம் எங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது, தொடர்ந்து எங்களுக்கும் அனுப்பி தாருங்கள் என்று தங்கள் விலாசத்தை கொடுத்திருக்கிறார்கள்.
பிரியமானவர்களே, நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கள் ஏராளம். அவைகளை அறிந்தவர்களாக உணர்ந்தவர்களாக நாம் செயல்படவேண்டியது அவசியம்.
இன்னும் பிரதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது இருப்பதால், இதற்கு தேவைகள் அதிகமாகிறது.
ஒவ்வோரு மாதமும் புத்தகம் வெளியிடுவது சாதாரணமான காரியம் அல்ல, ஒவ்வோரு இதழும் சவாலாகத் தான் வெளியிடப்படுகிறது, தேவனுடைய கிருபையும், தேவனுடைய துணையும் இல்லாமல் இருக்குமானால் கட்டாயமாக இப்புத்தகம் வெளியிட முடியாது எல்லா கனமும் மகிமையும் தேவனுக்கே உண்டாவதாக!
இந்த வருடத்தில் பிப்ரவரி மாதம் முதல் எல்லாமாதமும். தொடர்ச்சியாக ஜீவ அப்பம் வெளியிட தேவன் கிருபை செய்து வருகிறார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இதற்கு தேவ பிள்ளைகளாகிய உங்களின் ஜெபமும், நீங்கள் கொடுக்கும் ஒத்துழைப்பும் முக்கிய காரணம்.
தொடர்ந்து உங்களின் ஜெபமும் ஒத்துழைப்பும் தேவை, கர்த்தரை மட்டுமே சார்ந்து, விசுவாசத்துடன் இந்த ஊழியம் நடை பெற்று வருகிறது. நீங்கள் இந்த ஊழியத்தில் பங்கு எடுத்து செயல் படும் போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நிச்சயமாக உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். எல்லா வித நன்மைகளையும் பெற்று நீங்கள் சுகத்துடன் வாழ்வீர்கள்.
இந்த ஊழியத்துடன் இணைந்து செயல்படும் போது, நீங்களும் ஊழியம் செய்ய ஆரம்பிக்கிறீர்கள். இந்த ஊழியத்தின் மூலமாகவும், நமது ஜீவ அப்பம் மாத இதழ் மூலமாகவும் இரட்சிக்கப்பட்டு, மக்கள் ஆசீர்வதிக்கப்படும் போது அந்த ஆசீர்வாதத்தின் பலனை கர்த்தர் உங்கள் கணக்கில் கொண்டு வருவார்.
புத்தக ஊழியம் ஒரு மிஷனரியாக செயல்படக்கூடியது. எப்படி என்றால் நாம் நேரடியாக சென்று சொல்ல முடியாத இடங்களுக்கும் தேவனுடைய வார்த்தைகளை இந்த புத்தகத்தின் மூலமாக நாம் எழுதி அனுப்ப முடியும். நாம் போக முடியாத இடங்களுக்கும் வீடுகளுக்கும் இப்புத்தகம் சென்று, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவித்து,தேவனுடைய வார்த்தையை சொல்லி, இயேசு கிறிஸ்துவை அறிந்திராத அநேகரை இரட்சிப்புக்கு நேராக நடத்துகிறது.
உலகத்தின் நெருக்கத்தால் சூழ்நிலைகள் எதிராக இருக்கும் போது சோர்ந்து இருக்கும் தேவ பிள்ளைகளை உற்சாகப் படுத்தி, விசுவாசத்தில் உறுதியாக நிற்க தேவனுடைய வார்த்தையால் பெலப்படுத்துகிறது. நமது ஜீவ அப்பம் மாத இதழ் ஒரு மிஷனரியாக செயல்படுகிறது. எனவே ஜீவ அப்பம் மாத இதழ் என்னும் மிஷனரியை தாங்குங்கள்.
அன்பானவர்களே இந்த ஊழியத்தில் இதுவரை நீங்கள் பங்கு எடுக்காமல் இருந்தால் உடனடியாக பங்கு எடுக்க முன் வாருங்கள். கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதித்து உங்களை உயர்த்துவதை நீங்கள் காண்பீர்கள்.
தொடர்ந்து உங்களுக்காக ஜெபிக்கிறோம். தேவாதி தேவன் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சமாதானத்தினால் நிறைத்து, ஒரு குறைவும் இல்லாமல் நல்ல சுகத்துடனும் பெலத்துடனும், சந்தோஷமாக வாழ கிருபை தருவாராக ஆமேன்.
ஜீவ அப்பம் ஊழியங்களின் செயல்பாடுகள்
”ஜீவ அப்பம் ஊழியங்கள்” வட சென்னை பகுதியிலே திருவொற்றியூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு தனி மனிதனும் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் அவரை பின்பற்றும் சீஷர்களாக, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வேண்டும் என்ற தேவன் கொடுத்த ஆத்தும பாரத்தோடு செயல்பட ஆரம்பித்தோம்.
சிறு ஜெப குழுவாக ஆரம்பிக்கப்பட்ட ஊழியம். பிறகு கைப்பிரதி அச்சிட்டு விநியோகித்து தனி மனித சுவிசேஷ பணியிலே செயல் பட்டோம்.அதன்பின் நாம சந்திக்காத நபர்களையும் பத்திரிக்கை சந்தித்து சுவிசேஷத்தை அறிவிக்கும் என்று கர்த்தருக்குள் நாங்கள் ஜெபித்து தீர்மானிக்க கர்த்தர் உதவி செய்த படியினாலே புத்தகம் வழியாக ”ஜீவ அப்பம்”மாதாந்திர பத்திரிக்கை வழியாக சுவிசேஷத்தை அறிவிக்க தேவன் வாசலை திறந்தார்.
திரளான ஜனங்கள் கூடி சுவிசேஷத்தை கேட்பதற்கு இசைவாக பொது இடங்களில் சுவிசேஷ கூட்டங்கள் நடத்தவும் தேவன் கிருபை செய்கிறார். வேதத்தை ஓவ்வொருவரும் கிரமமாக கற்று தேவனுக்கு சாட்சியாய் வாழ ”வேத பாடக் கூட்டங்கள்” நடத்தவும் தேவன் கிருபை செய்கிறார்.
சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், சபை இல்லாத இடங்களில் சபை ஸ்தாபிக்கவும் தேவன் தரிசனம் தந்துள்ளார்.
ஜீவ அப்பம் ஊழியங்களின் முதல் திருச்சபையாக திருவொற்றியூர், அம்பேத்கார் நகரில் "ஜீவ அப்பம் திருச்சபை'' துவங்கப்பட்டு ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
திரித்துவ உபதேச அடிப்படையில், பெந்தெகொஸ்தே அனுபவத்தில் ஆராதனைகளும், ஊழிய செயல்பாடுகளுடன்,
கர்த்தரை மட்டுமே புகலிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம.
புதிய தலைமுறையினர் கிறிஸ்துவை விசுவாசிக்கவும், கிறிஸ்துவில் வளரவும் வேண்டும். நமது தலைமுறை சத்தியத்திலும், மெய்யான நீதியிலும், தன்னை நேசிப்பதைப் போல பிறரை நேசித்து அன்பு கூரவும் வேண்டும் என்ற இயேசு கிறிஸ்துவின் பாரத்தோடு தேவ கிருபையினால் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.இதே எண்ணத்தோடும் பாரத்தோடும் நீங்களும் இருப்பீர்கள் என்றால் உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.
ஒவ்வொரு தனி மனிதனும் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் அவரை பின்பற்றும் சீஷர்களாக, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வேண்டும் என்ற தேவன் கொடுத்த ஆத்தும பாரத்தோடு செயல்பட ஆரம்பித்தோம்.
சிறு ஜெப குழுவாக ஆரம்பிக்கப்பட்ட ஊழியம். பிறகு கைப்பிரதி அச்சிட்டு விநியோகித்து தனி மனித சுவிசேஷ பணியிலே செயல் பட்டோம்.அதன்பின் நாம சந்திக்காத நபர்களையும் பத்திரிக்கை சந்தித்து சுவிசேஷத்தை அறிவிக்கும் என்று கர்த்தருக்குள் நாங்கள் ஜெபித்து தீர்மானிக்க கர்த்தர் உதவி செய்த படியினாலே புத்தகம் வழியாக ”ஜீவ அப்பம்”மாதாந்திர பத்திரிக்கை வழியாக சுவிசேஷத்தை அறிவிக்க தேவன் வாசலை திறந்தார்.
திரளான ஜனங்கள் கூடி சுவிசேஷத்தை கேட்பதற்கு இசைவாக பொது இடங்களில் சுவிசேஷ கூட்டங்கள் நடத்தவும் தேவன் கிருபை செய்கிறார். வேதத்தை ஓவ்வொருவரும் கிரமமாக கற்று தேவனுக்கு சாட்சியாய் வாழ ”வேத பாடக் கூட்டங்கள்” நடத்தவும் தேவன் கிருபை செய்கிறார்.
சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், சபை இல்லாத இடங்களில் சபை ஸ்தாபிக்கவும் தேவன் தரிசனம் தந்துள்ளார்.
ஜீவ அப்பம் ஊழியங்களின் முதல் திருச்சபையாக திருவொற்றியூர், அம்பேத்கார் நகரில் "ஜீவ அப்பம் திருச்சபை'' துவங்கப்பட்டு ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
திரித்துவ உபதேச அடிப்படையில், பெந்தெகொஸ்தே அனுபவத்தில் ஆராதனைகளும், ஊழிய செயல்பாடுகளுடன்,
கர்த்தரை மட்டுமே புகலிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம.
புதிய தலைமுறையினர் கிறிஸ்துவை விசுவாசிக்கவும், கிறிஸ்துவில் வளரவும் வேண்டும். நமது தலைமுறை சத்தியத்திலும், மெய்யான நீதியிலும், தன்னை நேசிப்பதைப் போல பிறரை நேசித்து அன்பு கூரவும் வேண்டும் என்ற இயேசு கிறிஸ்துவின் பாரத்தோடு தேவ கிருபையினால் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.இதே எண்ணத்தோடும் பாரத்தோடும் நீங்களும் இருப்பீர்கள் என்றால் உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.























