Enmeetha Ithanai Anbu | என்மீதா இத்தனை அன்பு | Tamil Christian New Song ...
என்மீதா இத்தனை அன்பு
வியந்து பார்க்கின்றேன்
விலையேற பெற்ற உந்தன்
இரத்தத்தால் மீட்டீரே
உம் அன்பின் அகலம் நீளம் உயரம்
உணர்ந்து கொள்ள செய்தீரே
உதவாத என்னையும்
உருவாக்கி மகிழ்ந்தீரே
1. நிந்தைகள் அடைந்தும் அவமானமடைந்தும்
எனக்காக யாவையும் சகித்தீரே..
உமக்கு முன்பாக என்னை வைத்து
சந்தோஷமாக ஏற்றீரே...
2. காரி உமிழ்ந்தும் காயங்கள் பட்டும்
எனக்காக யாவையும் ஏற்றீரே.
உம் அன்பின் உறவில் என்னை சேர்க்க
எனக்காக மரித்தீரே
3. உறவுகள் என்னை வெறுத்த போதும்
உம் அன்பு என்னை தாங்குதையா
சாம்பலான என் வாழ்வை
சிங்காரமாக மாற்றினீரே
பாடல் வரிகள்
..... .......................
என்மீதா இத்தனை அன்பு
வியந்து பார்க்கின்றேன்
விலையேற பெற்ற உந்தன்
இரத்தத்தால் மீட்டீரே
உம் அன்பின் அகலம் நீளம் உயரம்
உணர்ந்து கொள்ள செய்தீரே
உதவாத என்னையும்
உருவாக்கி மகிழ்ந்தீரே
1. நிந்தைகள் அடைந்தும் அவமானமடைந்தும்
எனக்காக யாவையும் சகித்தீரே..
உமக்கு முன்பாக என்னை வைத்து
சந்தோஷமாக ஏற்றீரே...
2. காரி உமிழ்ந்தும் காயங்கள் பட்டும்
எனக்காக யாவையும் ஏற்றீரே.
உம் அன்பின் உறவில் என்னை சேர்க்க
எனக்காக மரித்தீரே
3. உறவுகள் என்னை வெறுத்த போதும்
உம் அன்பு என்னை தாங்குதையா
சாம்பலான என் வாழ்வை
சிங்காரமாக மாற்றினீரே
Aththuma Vanjithu Katharuthe | ஆத்துமா வாஞ்சித்து | Tamil Christian New ...
ஆத்துமா வாஞ்சித்து கதறுதே
நேசரின் முகத்தை தேடுதே
உம் பாதம் பணிந்து உம்மையே நோக்கி
ஆனந்தம் கொள்ளுதே
பாவ சேற்றில் கிடந்தேன் நான்
கழுவி அணைத்தீரே
நிம்மதியின்றி தவித்த எனக்கு
ஆறுதல் தந்தீரே
நீண்ட தூரம் சென்றேன் நான்
தேடி வந்தீரே
விலகி சென்ற என்னை அணைத்து
அன்பை தந்தீரே
பாலைவனத்தில் கிடந்தேன் நான்
பாதுகாத்தீரே
ஆதரவின்றி இருந்த எனக்கு
உதவி செய்தீரே
யுத்தத்தில் வல்லவர் | Yuthathil Vallavar | New Tamil Christian Song
யுத்தத்தில் வல்லவர்
கர்த்தர் என்பது அவர் நாமம்
சர்வ வல்ல தேவனவர்
சகலத்தையும் ஆள்பவரே
எனக்காக யாவும் செய்து
என்னோடு கூட இருந்து
என்னையவர் நடத்திடுவரே
அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமாய் பாடிடுவேன் அனுதினமும் உயர்த்திடுவேன்
எதிரிகளால் உருவாகும் ஆயுதங்கள் வாய்க்காமல்
காக்கின்ற தேவனவர் என்னோடு இருக்கின்றாரே
எனக்காக வழக்காடி எனக்காக நியாயம் செய்து
நீதியாய் தீர்ப்பு செய்வாரே
உன்னை விட்டு விலக மாட்டேன் உன்னை என்றும் கைவிட மாட்டேன்
என்று சொன்ன தேவனவர் என்னோடு இருக்கின்றாரே
எனக்கு முன்னே அவர் சமூகம் எதைக்குறித்தும் கவலை இல்லை
என்னை என்றும் காத்திடுவாரே
திறந்த வாசலை உனக்கு முன்னே வைக்கின்றேன் என்று சொல்லி
நடத்துகின்ற மீட்பர் இயேசு என்னோடு இருக்கின்றாரே
ஒருவரும் பூட்டாதபடி வாசலை திறந்து வைத்து
என்றென்றும் நடத்திடுவாரே
உலகத்தின் முடிவுவரை சகல நாளும் கூட இருப்பேன்
என்று சொன்ன இயேசு ராஜன் என்னோடு இருக்கின்றாரே
என்னை அவர் பாதுகாப்பார் என்னை அவர் வழி நடத்துவார்
எனக்கென்றும் இயேசு போதுமே
தேவையானதை மட்டும்...பேச வேண்டும்.
சிறுவன் ஒருவன் தன் ஆசிரியரிடம் வந்து "சார் Sex என்றால் என்ன? என்று கேட்டான். இந்த சிறு வயதில் கேட்க கூடாத கேள்வியை கேட்கிறானே என்று ஆசிரியருக்கு கோபம்.ஆனாலும் தனது கோபத்தை மறைத்து, செக்ஸ் என்றால், தாம்பத்திய உறவு.
அது கணவன் மனைவிக்காக கடவுளால் கொடுக்கப்பட்டது. அதன் மூலமாகவே பிள்ளைகள் பிறக்கிறார்கள். என்று மிகவும் விரிவாக சில நிமிடங்கள் அந்த சிறுவனிடம் விவரித்து சொல்லி விட்டு, இந்த வயதிலேயே இது மாதிரி கேள்விகளை எல்லாம் கேட்க கூடாது என்று கோபத்துடன் சொன்னார்.
ஆசிரியர் சொன்னவைகளை எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த சிறுவன் கொஞ்ச நேரம் ஆசிரியரையே பார்த்து விட்டு, குழப்பத்துடன், ஆசிரியர் சொன்னது எதுவும் புரியாமல் ஒரு பேப்பரை காண்பித்து, சார் இதில் Sex என்று போட்டிருக்கிறது இதற்கு நேராக என்ன எழுத வேண்டும் என்று கேட்டான்.
...........
இப்படிதான் அநேகர்...மற்றவர்களின் புரிதலுக்கு ஏற்ற மாதிரி பேசாமல் தனக்கு தெரிந்ததை எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
எந்த இடத்தில் எது தேவையோ அதை மட்டும் சரியாக அறிந்து பேச வேண்டும்.
அதே தந்திரங்கள் பலிக்குமா?
கெட்டுப்போகிறவர்களுக்கே பைத்தியமாக இருக்கும்
Bread of Life Church















