Bread of Life Church India

உன்னால் முடியும்


கர்த்தர் நமக்குக் கொடுத்த அதிகாரத்தை நினைவுபடுத்தி, அதிகாரம் உள்ளவர்களாக நடந்துகொள்ளவும், தேவனிடத்தில் பெற்ற அதிகாரத்தைச் செயல்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்றும்  தம்முடைய வார்த்தையின் மூலம் பேச விரும்புகிறார். கர்த்தருடைய இந்த வார்த்தைகளைக் கருத்துடனும், ஜெபத்துடனும் வாசித்துத் தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.
 இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது’’ {லூக்கா 10:19} என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருடைய வழியில் நடக்கும் தேவ பிள்ளைக்ளுக்கு விசேஷமான அதிகாரத்தை இயேசு கிறிஸ்து கொடுத்திருக்கிறார்.
அது என்னவென்றால் சத்துருவின் சகல வல்லமைகளையும் மேற்கொள்ளக்கூடிய வல்லமை. மனிதர்களாயிருக்கிற நம்முடைய வாழ்க்கையில் கண்ணுக்கு மறைவாகப் பல விதமான போராட்டங்களைச் சந்தித்து வருகிறோம், இந்தப் போராட்டங்களுக்கு எல்லாம் காரணக் கர்த்தாவாயிருப்பது, சத்துரு என்று அழைக்கப்படும் பிசாசு.
இந்தச் சத்துருவினுடைய தந்திரங்களை முதலாவது தேவனுடைய பிள்ளைகள் அறிந்துகொள்ளவேண்டும். அதைவிட முக முக்கியமானது சத்துருவினுடைய வல்லமைகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

உண்மை வழி

மதங்களை சுமப்பது மனிதனுக்கு என்றுமே சுமைதான். மதங்கள் ஒன்றுக்கும் உதவாது.

உலகின் எந்த மூலையிலும் வாழும் எந்த மனிதனும்  உறவுகளே, அதை எந்த வகையிலும் பிரித்து பார்ப்பது மனிதனின் அறியாமையையே வெளிக்காட்டும்.

மனிதர் தங்கள் அடையாளங்களை பதிவு செய்ய முயல்கிறார்கள்.மனித மனங்களில் இருக்கும் அறியாமை இருளே கடந்த கால அடையாளங்கள்.

வெளிச்சத்தை பதிவு செய்து இருளை விலக்க முயல்கிறவர்களை மதவாதிகள் எதிர்ப்பது ஒன்றும் புதிய வரலாறு அல்லவே.

"ஜீவ அப்பம்'' (நவம்பர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது. 


எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது.  இந்த மாத ( நவம்பர்  2014) ஜீவ அப்பம் மாத இதழை  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.

தேவ கிருபையால், ஆவியானவரின் ஒத்தாசையுடன  எழுதப்பட்டிருக்கும்  தேவ செய்திகள் கட்டாயம் படிக்கும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.


தவறாமல் பதிவிறக்கி படியுங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
 
மேலும் இந்த மாத இதழைக்குறித்து  உங்கள் கருத்துக்களை கீழே பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.
 
Download link     

click-Jeeva Appam November 2014
                                                                                                                                  6 MB


நமது ஜீவ அப்பம் மாத இதழ் உங்கள் வீடு தேடி வரவேண்டுமானால், உங்களின் விலாசத்தை jeevaappam@gmail.com என்ற மின் அஞ்சல் மூலமாக  அனுப்பலாம். அல்லது, +91 9791047107 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 


உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்ய உங்கள் முக நூல் ( facebook)  பக்கத்தில் Share செய்யுங்கள்

"ஜீவ அப்பம்'' (அக்டோபர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது. 
எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது.  இந்த மாத ( அக்டோபர்  2014) ஜீவ அப்பம் மாத இதழை  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.

மனந்திறந்து உங்களுடன்


அன்பு ஜீவ அப்பம் இணைய வாசகர்களே, உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
 நமது ஜீவ அப்பம் வலைபூ தேவனுடைய கிருபையினால், தொடர்ந்து வருகிறது. இந்த வலைபூவின் மூலமாக இணையத்தில்  ஆவிக்குரிய சத்தியங்களை எழுதவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவிக்கவும், இணையத்தின் வழியாக தேவனுடைய ஊழியங்கள் செய்து வருகிறோம்,.

சவாலுக்கு சவால்



வாழ்க்கையில் போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது. நம்முடைய வாழ்க்கையில் வருகின்ற போராட்டங்கள் நம்மைத் தேவனோடு இன்னும் ஐக்கியப்படவும், நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையவுமே தேவன் அனுமதிக்கிறார். ஆனால் போராட்டமான சூழ்நிலையில் நாம் சோர்ந்து போகிறோம், கலங்குகிறோம். என்ன செய்வது என்று தெரியாமல் கவலைப்படுகிறோம்.
நம்முடைய வாழ்வில் போராட்டங்களை அனுமதிக்கிற தேவன் நம்மைத் தனியாக விட்டு விட்டு வேடிக்கை பார்க்கிறவர் அல்ல, அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நமக்கு உதவி செய்து, நம்மை உயர்த்துகிறவராக இருக்கிறார்.

வெற்றி வாழ்வின் துவக்கம்




வெற்றி வாழ்க்கை சாத்தியமே என்ற தலைப்பில் தொடர்ந்து தேவனுடைய வார்த்தையைத் தியானித்து வருகிறோம். இதில் செயல்படுத்த வேண்டிய அவசியம் என்ற பகுதியில்

2. பின்பற்றுதலில் உறுதி

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள் (கொலோசெயர் 3:1-4)
மேலான வாழ்க்கை என்றதும், வெற்றி என்றதும் வறுமையை ஜெயித்த, பணம்படைத்தவர்களும், உயர் பதவியில் இருப்பவர்களும், வசதி வாய்ப்போடு இருப்பவர்களுமே வெற்றிப் பெற்றவர்கள் என்று நினைத்துக்கொள்கின்றோம்.

சுவடுகள் (மூன்று) ஊழியத்தின் ஆரம்பம்


இருபத்து மூன்று வயதே நிரம்பிய வாலிப நாட்கள். ஊழியம் என்றால் என்ன? ஊழியத்தின் தன்மை என்ன என்று எதுவும் தெரியாத நிலையில் ஊழியத்தின் அழைப்பு.
ஆண்டவர் ஊழியத்திற்கு அழைத்திருக்கிறார் என்று ஒருவரிடமும் சொல்ல முடியாது. ஏன் என்றால் என்னைச் சுற்றி இருந்த உறவுகளுக்கு ஊழியம் என்றால் என்ன என்று தெரிய வாய்ப்பே இல்லை.
இந்தக் காலத்தில் ஒரு ஊழியக்காரனின் மகன் ஊழியத்திற்கு வருவதும், ஊழியத்தில் நிற்பதும் எளிது. அல்லது ஊழிய பிண்ணனி கொண்ட குடும்பத்தில் பிறந்து, ஊழியத்தில் வருவதும், ஊழியத்தில் நிற்பதும் எளிது. அப்படிப்பட்ட வாய்ப்பு இல்லை என்றாலும், நல்ல வசதி வாய்ப்புடன், பெயர் புகழுடன் செல்வாக்காய் இருந்தால் ஒருவேளை ஊழியத்தில் வருவதும், ஊழியத்தில் நிற்பதும் எளிதாக இருக்கலாம்.
ஆனால் இவைகள் எதுவும் இல்லாமல், ஆண்டவரின் அழைப்பை மட்டும் வைத்துக்கொண்டு, இந்தக் காலக் கட்டத்தில் ஊழியத்திற்கு வருவது சவாலாகும். இந்தச் சவாலை மனதுக்குள்ளாக ஏற்றுக்கொண்டே இந்த ஊழிய பயணத்தைத் தொடர ஆரம்பித்தேன்.

"ஜீவ அப்பம்'' (செப்டம்பர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது. 


எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது.  இந்த மாத  (செப்டம்பர் 2014) ஜீவ அப்பம் மாத இதழை  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.
தேவ கிருபையால், ஆவியானவரின் ஒத்தாசையுடன  எழுதப்பட்டிருக்கும்  தேவ செய்திகள் கட்டாயம் படிக்கும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.

எந்த நாள்...ஓய்வு நாள் ?

தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்’’ (ஆதி 2:2,3) என்றும் ஆறு நாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் (யாத் 31:17) என்றும் வேதாகமத்தில் வாசிக்கிறோம்.